Tuesday, June 26, 2012

வாசி யோகம்

வாசி யோகம்

வந்துபோகும் வளிமேல் கவனம் நிறுத்தி
வந்துபோகும் கணக்கை முடி வந்துபோகும் வளிமேல் கவனம் நிறுத்தி
வெந்துசாகும் பழக்கம் கழி
வீணே கசியும் கவனம் வளிமேல்
பூண நசியும் மரணம்
திருப்பி மனத்தை வாசியில் பூட்டத்
திறக்கும் அமுத வாரி
கருத்த மனத்தை வாசியால் வெளுத்துத்
திருந்த உடம்பு ஒளிரும்
கருத்த மனத்தை வாசியால் வெளுத்துத்
திருந்த உடம்பு ஒளியும்

வந்துபிறந் திறந்துபோகும் மடத்தனம் மடிந்துபோக
முந்திச்செல் வாசியோக வழி
நன்றி தென்றலாரே!
தென்றலாம் வாசியைக் கவனிக்கும் யோகத்தால்
என்றைக்கும் வாழலாம் நிசம்
முச்சந்தி வீதியில் போய்வரும் தென்றலை
இச்சித்து போதியில் வாழ்
மரண வாடை வீசா திருக்கமெய்ச்
சுரணை ஊட்டும் தென்றல்
சுத்த வெளியில் மெய்யைக் கரைக்கும்
புத்த விளக்கம் வளி
நாசிக்குள் வழியும் தென்றலை நேசித்து
வாசிக்கும் வழியைப் பிடி
மடியும் மடத்தனம் மாய்க்கும் வாசியோகம்
முடியும் உன்னால் விளங்கு
தென்றல் தீண்டி எழுந்த நாகம்
மன்றில் ஆடும் படம்
விரயமாகும் கவனம் இதெந்த மடத்தனம்
சரயோகம் மேல்வை கவனம்
விழிநாசி செவிமுச் சந்திவீதி வழிவாசி
வழிந்தோட வாய்க்கும் மெய்
நிறுத்துவீண் பேச்சை கவனம் மூச்சில்
இறுத்திவாழ் திறக்குமுன் நெற்றி
எங்கெங்கோ ஓடும் கவனத்தை வாசியில்
தங்கென்றால் கேளாக் குரங்கு
வளிமேல் கவனம் நிறுத்தச் சொன்னால்
சுளிக்கும் முகத்தைக் குரங்கு
ஓடுமனக் குரங்கை வாசியால் கட்டக்
கூடுமுனக் கென்றான் குருபரன்
விளக்கு மாறாய் சுத்தஞ்செய் வாசியால்
விளங்கு வீரே உம்மெய்
தாவிச் செல்நீ மரணம் உந்தன்
ஆவிப் பாகை உண்டு
பாவிச் சடலத்தை மெய்யாய் மாற்றும்
ஆவி அமுதத்தைக் குடி
கூவிச் செல்வேன் வாசியின் பெருமைநான்
தாவிச் செல்வேன் மரணம்
வாசிதானே சிவாவென்னும் அன்பின் ஊற்று
வாசித்தால் வராதென்றுங் கூற்று
உயிர்ப்பின் உணர்வை உனக்குத் தருகின்ற
உயர்வான வாசியைப் போற்று வளிமொண் டுண்டால் நெற்றி வெளுக்கும்
ஒளியுண் டாகுமே அறி.
வாசி பற்றி கவனம் நிற்க
ஆசி யாய்விழும் அளி
அன்பே சிவமாம் வாசி யூற்றை
உண்டே உவந்தால் போதி
போதி வெளியின் வாசி நிழலில்
போத ஒளியைக் காண்
அளிதரும் வளியை அள்ளி உண்டு
ஒளிவரும் வழியைக் காண்
காற்றுள்ள போதே தூற்றிக் கொண்டால்
கூற்றுன்னை அண்டா தொழியும்
காலி வெளியுள் நிரம்பிய வளியே
வாலை ஒளிக்கு மூலம்

அன்பெனுந்திருத் தென்றலை உள்ளிழுத்து வெளிவிட்டு
அன்புருவாய் நிற்பதே யோகம்
வாசியின் விளக்கம் சிவாவெனும் அன்பேநீ
வாசிக்க வாசிக்க விளங்கும்
இன்னும் இன்னும் உள்ளே ஆழ்ந்திருக்க
அன்பின் வன்மை விளங்கும்
அன்பா இன்னும் வாசிக்கக் கிடைக்கவில்லை
தென்றலின் இன்பமே அது
வாசிநீர் தென்றலாய்த் தீண்டுவீர் என்றுமும
தாசியால் உள்ளவன் நான்
தென்றலேஇரு தயவாய் இவ்வுலகில் என்றும்நீர்
வள்ளலேவரு வாருமைத் தழுவ
வெளிமடம் நாடிப் போகாதீர் உள்மடமாம்
ஒளிக்கடத் துள்ளே பராபரன்
காவி உடுத்து ஆவி வெளுக்காத
பாவி யவரோ சித்தர்
சித்தரே நீவிரென்று உண்மையே உரைத்தாலும்
பித்தனே நானென்பார் மாந்தர்
உத்தமன் ஒருவனை உள்ளே காணத்
தொற்றியே வாசியில் நில். காணாக் காற்றே காணும் உடம்பைப்
பேணும் ஊற்றாந் திடம்
வெளிவிடும் உள்வரும் மூச்சில் கவனத்தால்
ஒளிர்ந்திடும் உன்னுடல் மெய்
துளித்துளி யாய்வீழும் அளியமுதை யுண்ண
அளிக்குமே தாய்போன்ற வளி
ஆணவத்தலைப் பாகை கழற்றிவிட்டு வாசியோகங்
காணவுன்தலைப் பாக’ஐ’ ஒளிரும்
ஆணவத்தலைப் பாகை கழற்றிவிட்டு வாசியோகங்
காணவுண்ணலாம் உன்தலைப் பாகை
தலைப்பாக ‘ஐ’யனைக் காண வாசியில்நில்
அலைபாயும் பேய்மன மடங்கி
தலைப்பாகை எதற்குனக்கு தலைப்பாக ‘ஐ’யனேவுன்
தலைப்பாகை கவனிப்பாய் வாசி
உட்குருவாசி உனில்இருக்க வேறெவரோ குருமார்
நல்லருளாசி தருவார்உட் போதகர்
உத்தமன் உன்னுள்ளே வாசியாய் நிற்கபரி
சுத்தமே உன்மெய்யென் றுணர்
குண்டலி எழுப்பும் அமுத வாசியைக்
கண்டுளே இருதய வாய்
கருத்த மனத்தை வெளுக்கும் வாசியைக்
கருத்தில் குருவாய்ப் போற்று
வந்துபோகும் உருக்களோ குருமார் வாசியாய்
வந்துபோகும் அருவமே குருபரன்
உள்ளதிட மூச்சை உள்ளமன மின்றி
உள்ளாரி வரோ மாந்தர்
வெள்ளங்கி ஒளியை உள்ளுள்ளே காணஅருள்
வெள்ளத்திரு வளியை உண்
தம்படிக்கு உதவுமா வளிமேல் கவனமென்பாய்
தம்படிக்கு உதவுமா சவம்
வாசியா திருந்தால் வாசியை உள்ளுலக
வாசியாம் சிவாசிக் கார்
பேசா திருமனமே கவனக் காசை
வீசா திருவீணே நீ
சச்சி தானந்தச் சுடராம் வாசியால்
உச்சித் தாமரை மலரும்

அகஸ்தியர் வரலாறு

அகஸ்தியர் வரலாறு


 

அகத்தியர் வரலாறு:-
        ரிக் வேதத்தில் அகத்தியருடைய பிறப்பு கூறப்படுகின்றது. கடும் விஷங்களை நீக்கக் கூடிய மந்திரங்களை அகத்தியர் செய்தார். அவை ரிக் வேதத்தில் 1-191வது ரிக்காக விளங்குகின்றன. இதனை மௌனமாய் உச்சரிக்க, சகல விஷத் தொல்லைகளும் நீங்கும்.
     கேலன் என்ற மன்னனுக்குப் புரோகிதராய் இருந்தார். அப்போது ரிக் வேதத்தில் 1-165-192-ல் இருக்கும் ரிக்குகளைச் செய்தார்.
      அகத்திய மாமுனி காலத்தைக் கடந்த,காலத்தை வென்ற ஒரு மாமுனிவர். முன்பிறப்பில் அவருக்கு ஜடராக்கினி, தஹராக்கினி என்பன பெயர்கள் என பாகவதம் அறிவிக்கின்றது.
      ஸ்வாயம்புவ மன்வந்திரத்தில் தத்தோளி என்ற திருநாமத்துடன் விளங்கினார் என விஷ்ணுபுராணமும் முழங்குகின்றது.
      சுகேது என்னும் யட்சன் பிரம்மாவை நோக்கித் தவம் புரிந்தான். அவர் அருளினால் ஒரு பெண் குழந்தையை அடைந்தான். தன் மகளுக்குத் தாடகை என்று பெயரிட்டான். சுகேது தக்க பருவத்தில் தாடகையை ஜர்ஜன் என்னும் யட்சனின் மகனாகிய சுந்தன் என்பவனுக்கு மணமுடித்தான்.
    சுந்தனுக்கும், தாடகைக்கும் மாரீசன், சுபாகு என்னும் இரண்டு குமாரர்கள் பிறந்தனர். ஒரு நாள் சுந்தன் அகத்தியரின் ஆசிரமத்தை அடைந்தான். ஆணவத்தாலும் காமத்தாலும் மதிகெட்ட அவன் ஆசிரமத்தில் இருந்த மரங்களைப் பெயர்த்து எறிந்தும், மான் முதலிய ஜீவன்களைக் கொன்றும் ஆசிரமத்தை அழித்தான். தவச்சாலை பிணச்சாலை ஆனது. அகத்தியர் கோபங்கொண்டு பார்க்க, சுந்தன் சாம்பல் ஆயினான்.
   கணவன் இறந்ததை அறிந்த தாடகை தன் குமாரர்களுடன் அகத்தியர் இருக்கும் இடம் வந்தாள். அகத்தியரைக் கொல்ல எண்ணி அவர் மீது மூவரும் பாய்ந்தனர். அழிவன செய்தமையின் மூவரும் அரக்கர் ஆகுக! என அவர் சபிக்க மூவரும் அரக்கர் ஆயினர்.
    இவர்களை இராமபிரான் வதைத்த வரலாறு இராமாயணத்தினுள் காணலாம்.
    இனி, பிதுர்வாக்ய பரிபாலனம், மாத்ரு வாக்கிய பரிபாலனம் என்னும் அறத்தினை மேற்கொண்டு இராமன் வனவாசம் செல்கையில், தண்டகாரண்யத்து மகரிஷிகள் அனைவரும் அவனிடம் சென்று இராவணனால் படும் துயரங்களைக் கூறிச் சரண் புகுந்தனர்.
    சரணாகத வத்சலனான இராமன் அவர்களை ஆதரித்து, அரக்கரை அழிப்பதாக வாக்குறுதி தந்தனன். பின் அங்கிருந்து அகத்தியரின் ஆசிரமம் சென்றனன்.
           தன் ஆசிரமம் வந்த இராம, இலக்குவர்களை அகத்தியர் வரவேற்றார். அகத்தியர் அருள் கிடைத்தமையால் தனக்கு அனைத்தும் கிடைத்ததாக இராமபிரான் மகிழ்ந்தான்; எனில் அகத்தியரின் பெருமைதான் என்னே! என்னே!. பின் அகத்தியர் இராமபிரானுக்கு வில்லையும், நாராயண அஸ்திரத்தையும், வாள் ஒன்றினையும் கொடுத்தார். முடிவில் அவர்களைப் பஞ்சவடியில் தங்கியிருக்குமாறு அகத்தியர் வழியனுப்பி வைத்தார். இவை இராமாயணத்தில் காணப்படுவனவாம்.
    வனம் ஒன்றின் வழியாக அகத்தியர் சென்று கொண்டிருந்தார். தன் முன்னோர்கள் (பித்ருக்கள்) பெரும் பள்ளத்தில் ஒரு மரத்தில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர்களின் துன்பத்திற்குக் காரணம் கேட்டார். "அகத்தியா! நீ இல்லறத்தில் ஈடுபடவேண்டும். ஆண் சந்ததி ஒன்றைப் பெற்றெடுக்க வேண்டும். அப்போதுதான் எங்கட்கு இந்த யம தண்டனை தீரும்" என்றனர்.
     முன்னோர்களைக் கரையேற்ற எண்ணிய அகத்தியர், திருமணத்தில் எண்ணங்கொண்டார். விதர்ப்பராஜன் மகள் லோபமுத்திரையை மணந்தார். இளவரசிக்கு உரிய கோலங்களை நீக்கித் தவக்கோலம் கொண்டவளாக லோபமுத்திரையை மாற்றி அழைத்துக் கொண்டு கானகம் சென்றார்.
     நீண்ட நாள் கழித்து முன்னோர்களை எண்ணிய அகத்தியர், சந்ததி விருத்தி செய்ய எண்ணி லோபமுத்திரையை நாடினார். ஆனால் லோபமுத்திரையோ அகத்தியரை வணங்கி “சுவாமி! ஆண், பெண்ணை மணந்து கொள்வது புத்திரப்பேற்றினுக்குத்தான். நான் தங்களிடம் வைத்துள்ள பிரியத்தைப் போல நீங்களும் என் மீது பிரியம் வைக்க வேண்டும். இந்த பர்ணசாலையில் தவத்தைத் தவிர வேறு ஒன்றனையும் என்னால் எண்ண முடியவில்லை.
      தாங்கள் ஓர் அரண்மனை கட்ட வேண்டும். நான் அதில் ஆடை, ஆபரணங்கள், இதர சௌக்கியங்களுடன் இருந்து, உங்கள் மகனைப் பெற ஆசைப்படுகின்றேன்,“ என்று தன் உள்ளத்தில் இருப்பதை மறைக்காமல் கூறினார். சிற்றின்பத்திற்காக தவத்தை இழக்க விரும்பாத அகத்தியர், மன்னர்களிடம் யாசகம் பெறச் சென்றார். சுருதர்வா என்ற மன்னனிடம் சென்றார். மன்னன் அவரை வரவேற்று வேண்டிய பொருள்களை எடுத்துச் செல்லுங்கள் என்று வேண்டினான்.
    மறுத்த அகத்தியர் மன்னனிடம் வரவு, செலவு கணக்கைக் கேட்டார். கணக்கைப் பரிசோதிக்க வரவிற்கும், செலவிற்கும் சரியாய் இருப்பதைக் கண்டு, “உன்னிடம் நான் தானம் பெறுவது பாவம்“ என்று கூறி வேறு மன்னனிடம் புறப்பட்டார். அத்தனை மன்னர்களிடத்தும் உபரியாக நிதி இல்லாமையால் யாரிடமும் தானம் பெறாது சென்றார் அகத்தியர்.
    (பண்டைக்காலம் முதலே நம் மன்னர்கள் வரவு செலவு திட்டம் (பட்ஜெட்) வைத்திருந்தனர் என்பதும், குடிமக்களிடமிருந்து வரவு ஆகும் பொருளையெல்லாம் திரும்பவும் குடிமக்களுக்கே செலவு செய்தனர் என்பதும், அரசன் பொருளைக் கண்டபடி செலவு செய்யவில்லை என்பதும், முன்னோர்கள் நமக்கு வைத்துச் சென்ற அரசியல் அனுபவ நீதியும், நிதியுமாகும்.)
     அரசர்கள் அனைவரும் அகத்தியருடன் ஆலோசித்தனர். ‘தவநிதியே! மணிமதி என்னும் நகரில் இல்வலன் என்ற அசுரன் அளவற்ற செல்வம் உடையவனாய் வாழ்கின்றான். அவனிடம் யாசிப்போம் என்று முனிவரை அழைத்துச் சென்றனர்.
    இல்வலன் தவசிகளைக் கொன்று தின்னும் பழக்கமுடையவன். முனிவர் கோலம் தரித்து அவன் முனிவர்களைத் தன் ஆசிரமத்திற்கு அழைத்துச் செல்வான், தன் தம்பியை ஆடாக்கிச் சமைத்து, அதனை முனிவர்களுக்குப் பரிமாறுவான். முனிவர்கள் உண்டு முடித்தபின்."வாதாபி வா!"என்று அழைத்தால் வாதாபி உருவம் பெற்று, முனிவரின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வருவான். பின் இருவரும் இறந்த முனிவரின் உடலைத் தின்று பசியாறுவர்.
    இல்வலன் அகத்தியருக்கும் தன் தம்பியை உணவாக்கிப் பரிமாறினான். அகத்தியரும் உண்டார். வழக்கப்படி வாதாபி வா! வா!  எனப்பலமுறை அழைத்தும் வாதாபி வரவில்லை. அகத்தியர் அவனை ஜீரணமாபி எனக் கூறி ஜீரணித்து விட்டார். பிரம்மாவின் வரத்தையும் வெல்லும் ஆற்றல் அகத்தியருக்கிருந்தது.
    இல்வலன் அகத்தியரை வணங்கினான். சுவாமி! வேண்டியது என்னவோ? என்றான். இல்வலா! பிறர்க்குத் துன்பம் இல்லாமல் உன்னால் முடிகின்ற தனத்தைக் கொடு என்றார். ஆனால் அசுரனோ, நான் இவ்வளவு கொடுக்கப் போகிறேன் என்பதைச் சொன்னால் கொடுக்கிறேன் என,
    இந்த அரசர்கள் ஒவ்வொருவருக்கும் பதினாயிரம் தங்க நாணயங்களையும், எனக்கு அதைப்போல் இருமடங்கும் ஒரு தங்க ரதமும் மனோ வேகமுள்ள இரண்டு குதிரைகளையும் தரப்போகின்றாய் என்றார். அசுரனும் அவ்வாறே கொடுக்க ரதம் அடுத்த வினாடி அகத்தியரை அவர் ஆசிரமத்தில் சேர்த்தது.
    ஆனால் அசுரன் அரசர்களையும், அகத்தியரையும் பின் தொடர்ந்து வந்தான். அனைவரையும் வஞ்சித்துக் கொன்று கொடுத்ததைத் திரும்பக் கவர்ந்து செல்ல வேண்டும் என்பது அவன் எண்ணம். அரசர்கள் அஞ்சி அகத்தியரை வேண்ட, தீயவனை ஒரு ஹீங்காரத்தால் அழித்தார்.
     அசுரர்களான இல்வலன், வாதாபி இருவராலும் கொள்ளையடிக்கப்பட்ட செல்வத்தை இங்ஙனம் உலக மக்கட்குப் பயன்படச் செய்தார்.
     தம் இருப்பிடம் அடைந்தார். மனைவியிடம் “ஆயிரம் புதல்வர் வேண்டுமா? அல்லது ஆயிரம் புதல்வர்க்கு நிகரான ஒரு புத்திரன் வேண்டுமா?“ எனக் கேட்க, அவ்வம்மையார், “வித்தையிலும், விநயத்திலும், சீலத்திலும்,ஞானத்திலும், ஒப்பில்லாத ஒரே புத்திரன் வேண்டும்,“ என வேண்ட, அகத்தியர் அருளினால், த்ருடாயு என்னும் புதல்வன் வேதங்களை உச்சரித்துக் கொண்டே பிறந்தான். த்ருடாயு வளர்ந்து யாகசாலைக்குத் தேவையான ஹோம திரவியங்கள், விறகுகள் இவற்றை நாள்தோறும் சுமந்து வந்ததால் அப்புதல்வன் இத்மவாஹனன் எனப்பட்டான். அகத்தியரின் முன்னோர்களும் யமதண்டனை நீங்கிச் சுவர்க்கம் புகுந்தனர்.
      இந்திரன் பிரம்மஹத்யா தோஷத்தினால் ஒரு முறை இந்திரலோகத்தை விட்டு ஓடியொளிந்தான். பாண்டவர்களின் முன்னோனும் சந்திரகுல மன்னனுமாகிய நகுஷன் அசுவமேதயாக பலத்தால் இந்திரன் ஆயினன்.
     செருக்கினால் சீரழிந்தான் அவன். இந்திராணியைக் காமுற்றான். தன் பெருமையை அவள் அறிந்து மதிக்க வேண்டுமென எண்ணினான். இதுவரை எந்த இந்திரனும் பயன்படுத்தாத ஒரு வாகனத்தில் செல்ல வேண்டும். அதுவே தன் பெருமைக்கு தகுந்தது என முடிவு செய்து சப்தரிஷிகள் சுமக்கும் பல்லக்கில் இந்திராணி இருப்பிடம் சென்றான்.
     பல்லக்கின் முன்புறத்தில் குள்ளமான திருமேனியுடைய அகத்தியர் சுமந்து சென்றார். அதனால் பல்லக்கு மெதுவாகச் சென்றது. காமவேகம் கொண்டிருந்த நகுஷன் பல்லக்கு வேகமாகச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் “ஸர்ப்ப! ஸர்ப்ப! (வேகமாகச் செல்) என்று கூறி அகத்தியரைக் காலால் தீண்டினான்.
     அகத்தியர் உடனே “ஸர்ப்போ பவ“ (பாம்பாக மாறுவாய்) என்று சபித்தார். இங்ஙனம் அவர் ஓர் அபலையின் கற்பினைக் காத்தார். இந்த நகுஷன் பின்னாளில் பாண்டவர் வனவாச காலத்தில் பீமனைப் பிடிக்க, அவனைக் காப்பாற்ற வந்த தருமனிடம் தருமத்தின் சூட்சுமங்களைக் கேட்டுணர்ந்து சாபவிமோசனம் பெற்றான். இவ்வரலாற்றை மகாபாரத்தினுள் காணலாம்.
      பார்வதி தேவியாரின் திருக்கல்யாணத்தைத் தரிசிக்க தேவர்கள், முனிவர்கள் மற்றும் உள்ள திரிலோக வாசிகள் அனைவரும் இமயமலையில் கூடினர். இவர்களின் பாரதத்தைத் தாங்காது வடதிசை தாழ்ந்தது. தென்திசை உயர்ந்தது. உலகினை அழிவிலிருந்து காக்கத் திருவுள்ளம் பற்றிய சிவபிரான் அகத்தியரைத் தென்திசைக்கு அனுப்பினார். இறைவனின் ஆணையை ஏற்ற அகத்தியர் தென்திசை வந்தார். உலகம் சீர் பெற்றது.
       சிவபிரான் முதல் அனைவரும் ஒரு தட்டில். அகத்தியர் ஒரு தட்டில் என்றால் அவர் தம் பெருமையை என்னென்பது? தம் திருக்கல்யாண கோலத்தை அகத்திய முனிபுங்கவருக்கு அவர் இருந்த இடத்தில் காட்டி அருளினார் சிவபிரான்.
     அகத்தியர் ஒரு நாள் திருக்கயிலை மலையில் இதுவரை தாம் உணர்ந்து அறியாத திவ்விய நறுமணம் ஒன்றினை உணர்ந்தார். அதனைப் பற்றி கயிலைநாதனிடம் வினவினார். அந்த நறுமணம் அங்கிருந்த ஓலைச்சுவடிகளின் நறுமணம் என அறிந்தார். அச்சுவடிகளில் இருந்த மொழி நறுமணத்தோடு, இனிமையும் மிகுந்து இருந்ததால் அதனைத் தமிழ் என்றார். அம்மொழியே தமிழ் மொழியாம்.
     “என்றுமுள தென்தமிழ் இயம்பி இசை கொண்டான்“ (கம்பராமாயணம்)
   சிவபிரான் தமிழ் மொழியை அவருக்கு உபதேசம் செய்தார். தமிழ்மொழியுடன்தான் அகத்தியர் தென்திசை வந்தார். காடு திருத்தி நாடாக்கினார். 1) த்ருணதூமாக்கினி (தொல்காப்பியர்) 2) அதங்கோட்டு ஆசான் 3) துராலிங்கர் 4) செம்பூட்சேய் 5) வையாபிகனார் 6) வாய்ப்பியனார் 7) பனம் பாரணனார் 8) கழாரம்பனார் 9) அவினயனார் 10) காக்கை பாடினியார் 11) நற்றத்தனார் 12) வாமனனார் என்னும் பன்னிருவருக்குத் தமிழ்மொழியை உபதேசம்  செய்தார்.
   1) எழுத்திலக்கணம் 2) சொல்லிலக்கணம் 3) பொருளிலக்கணம் 4) யாப்பிலக்கணம் 5) அணியிலக்கணம் – என்ற ஐவகை இலக்கணங்கள் அடங்கிய “அகத்தியம்“ என்னும் தமிழ் இலக்கண நூலை இயற்றினார்.
    அகத்தியர் தென்திசை வருங்காலத்தில், மேரு மலையுடன் பகைகொண்ட விந்திய மலை அதனுக்குப் போட்டியாக வளரத் தொடங்கியது. கர்வம் கொண்ட விந்தியம் முனிபுங்கவருக்கு வழிவிடவில்லை. தம் கரத்தை பிரும்மாண்டத்தின் எல்லை வரை உயர்த்தினார்; விந்தியத்தின் உச்சிமீது வைத்தார். அழுத்தினார். விந்தியம் தாழ்ந்தது.
    “நாகமது நாகமுற நாகமென நின்றான்“ (கம்பராமாயணம்)
     சூரபன்மாவின் தங்கை அஜமுகி அவள் பிள்ளைகள் அகத்தியரைக் கொல்ல வர, அவர்களைப் பாசுபத அஸ்திரத்தினால் அழித்தார். போகும் வழியில் கர்வத்துடனிருந்த இந்திரத்துய்ம்மனன் என்னும் பாண்டி மன்னனை யானையாகச் சபித்தார். இவனே கஜேந்திரன் எனப்பட்டான்.
    திருக்குற்றாலத்துப் பெருமானை ஹரிஹரரூபமாய் தரிசித்தார். அதன்பின் ஒரு திருத்தலத்திற்குச் சென்றார். இறைவனை தரிசனம் செய்ய, ஆனால் திருக்கோயில் சாத்தப்பட்டு இருந்தது. வண்டின் வடிவம் (ஈ) கொண்டார். மலர்களில் இருந்த தேனை எடுத்து அபிஷேகம் செய்தார். இங்ஙனம் வண்டின் (ஈ) வடிவம் கொண்டு அகத்தியர் வழிபட்ட தலமே திருஈங்கோய்மலை.
    இந்திரன் சிவபூசனைக்காக நந்தவனம் வைத்தான். சூரபன்மனின் ஆணையால் மழை பெய்யாது நந்தவனம் வாட, இந்திரன் மனம் வாடினான். விநாயகனை வேண்டினான். அவர் காக்கை வடிவம் எடுத்துச் சென்று அகத்தியரின் கமண்டல தீர்த்தத்தைக் கவிழ்த்தார். கமண்டல கங்கை பெருக்கெடுத்தது. இந்திரனின் நந்தவனம் செழித்தது. கா, விரியும்படி இந்நதி பெருகியதால் காவிரி எனப்பட்டது.
     காய்சின வழுதி (வழுதி – பாண்டியன்) அகத்தியரை முன்னிட்டுக் கொண்டு தமிழ் ஆராய்ந்தான். இது தலைச்சங்கம் எனப்படும். புதிதாக நூல் செய்பவர் சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய வேண்டும் என்ற விதி வகுக்கப்பட்டது. அகத்தியரின் இலக்கணம் பரவிய நாடுகள் செந்தமிழ் நாடு எனவும் மற்றவை கொடுந்தமிழ் நாடு எனவும் அழைக்கப்பட்டன.
    “தென்பாண்டி குட்டங் குடங்கற்கா வேண்பூழி
    பன்றி யருவா வதன்வடக்கு – நன்றாய்
    சீதம்ம லாடு புனநாடு செந்தமிழ்சேர்
    ஏதமில் பன்னிநொட் டெண்“ 
    தம் குலகுருவான வியாழ பகவானை அவமதித்து அதனால் பெருந்தொல்லைகளுக்கு ஆளானான் இந்திரன். விருத்திராசூரனிடம் தோல்வியடைந்து பதவியிழந்தான். பின் ததீசிமுனிவரின் முதுகெலும்பினால் புதிய வஜ்ஜிராயுதம் செய்து அதனால் அசுரனைக் கொன்றான். மற்ற அசுரர்கள் கடலில் ஒளிந்து கொண்டனர். இரவு நேரத்தில் வெளிப்பட்டு முனிவர்களைக் கொன்றனர். சாதுக்கள் இதனால் அவதிப்பட்டனர். யாக, யக்ஞங்கள், ஜப, தபங்கள் அழிந்தன. ஹோமார்ச்சனைகள் நின்றன. பூமி ஒளியிழந்தது.
    தேவாதி தேவர்கள் அனைவரும் நடுநடுங்கி, இந்திரனை முன்னிட்டுக் கொண்டு மகா விஷ்ணுவைச் சரண் புகுந்தனர். எம்பிரான் அனைவரையும் அகத்தியரிடம் அனுப்பினான். அனைவரும் அவரிடம் வந்து அவர்தம் மகிமைகளைக் கூறிக் கொண்டாடினர்.
    கருணை கனிந்த அகத்தியர் அவர்கட்கு அருள் பாலித்தார். கடற்கரை சென்றார். தம் தவ வன்மையால் கடல்நீரை ஒரு சொட்டு நீரைப் போல சுருக்கினார். பின் அதனை உண்டார். சகலரும் இதனைக் கண்டு அதிசயித்தனர். தேவர்கள் கடலுள் சென்றனர். அசுரர்களை எதிர்த்துப் போரிட்டனர். முனிவர்களுக்குச் செய்த அபராதத்தினால் வலிமையிழந்த அசுரர் தோற்றனர்; அழிந்தனர். சிலர் பாதாளம் சென்று மறைந்தனர். இங்ஙனம் அனைவரின் அச்சத்தையும் அகத்தியர் அகற்றினார்.
   மைத்ரா வருணரின் ஒளியினால் கலசத்திலிருந்து பிறந்ததால் கும்பசம்பவர் என்றும் கலசயோனி என்றும் அழைக்கப்படுகின்றார். இவரால் செய்யப்பெற்ற சம்ஹிதை ஒன்று வேதங்களில் விளங்குகின்றது. அஃது அகத்திய சம்ஹிதை என்று பெயர் பெற்றுள்ளது.
    வெகுகாலத்திற்கு முன் தாரகன் என்னும் அரக்கனும் அவனைச் சார்ந்தவர்களும் உலகினைத் துன்புறுத்தினர். அவர்களை அழிக்க எண்ணிய இந்திரன் அக்நி, வாயு இவர்கள் துணைகொண்டு பூமிக்கு வந்தான். தேவர்களைக் கண்ட அசுரர் கடலில் அஞ்சி மறைந்தனர். பின் அவர்கள் தேவர்களை வெல்ல உபாயந்தேடினர். இதனை அறிந்தும் அக்நி அவர்களை அழிக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அரக்கரின் வன்மை அதிகம் ஆயிற்று. கோபம் கொண்ட இந்திரன் அக்னி தேவனே! நீ வாயுவுடன் கூடி கும்பத்திலிருந்து பிறந்து கடல் நீரைக் குடிக்கக் கடவாய் எனச் சாபம் இட்டான். இஃது அகத்தியரின் பிறப்பிற்குக் காரணம் ஆயிற்று.
    தமிழ்நாட்டைக் கந்தப்பெருமான் அகத்தியருக்குத் தந்தான். அவர் அதனை பாண்டியனுக்கு வழங்கினார்.
    பொன்னி நதியைச் சிவபிரான் அகத்தியருக்கு வழங்கினார். தன் தவத்திற்குத் தொல்லை தந்த மதியநந்தை என்னும் தெய்வப் பெண்ணை மனிதப் பெண்ணாக மாற்றினார். நீரில் படுத்திருந்து பன்னிரெண்டு ஆண்டுகள் தவம் இயற்றினார்.
    மகரிஷிகள் ஒருமுறை மூன்றாண்டுக்காலம் தொடர்ந்து யாகம் செய்தனர். கோபம் கொண்ட தேவர்கள் யாகத்தில் அவிர்ப்பாகம் வாங்கச் செல்லவில்லை. கடும் பஞ்சத்தை உண்டாக்கினர். வளம் குறைந்ததால் யாகத்திற்குப் பொருட்கள் கிடைக்கவில்லை. முனிவர்கள் அகத்தியரை வேண்ட அவர் உத்திரகுருவிலிருந்து பொருள்களை வரவழைத்தார். முனிவர்கள் யாகத்தை நிறைவுடன் நடத்தி திரிமூர்த்திகளுக்கு அவிர்ப்பாகம் கொடுக்கும் தருணத்தில் அஞ்சி நடுங்கிய தேவர்கள் மன்னிப்பு வேண்டி யாக தரிசனம் செய்து அவிர்ப்பாகம் பெற்று மழை பொழிந்து வளம் தந்தனர்.
    ஆதித்ய ஹ்ருதயம் என்னும் மந்திரத்தை ஸ்ரீ ராமனுக்கு உபதேசம் செய்தார் அகத்தியர்.
     சுவேதன் என்பவன் பிணம் தின்னும் சாபம் பெற்று இருந்தான். அகத்தியர் இச்சாபத்தைப் போக்கினார். உதய காலத்தில் அகத்திய நட்சத்திரம் ஆகாயத்தில் இருந்து கொண்டு கடல்நீரை வற்றச் செய்கிறது.
     துட்பண்ணியன் என்பான் பேயாய் இருந்த சாபத்தையும், இந்திர சாபத்தால் பூமியில் பிறந்து வாடிய அரம்பையின் சாபத்தையும் அகத்தியர் போக்கினார்.
     தீர்த்த யாத்திரை செய்த அர்ச்சுனன் அகத்திய தீர்த்தத்தில் புனிதநீர் ஆடினான். அகத்தியரால் ஸ்தாபிக்கப் பெற்ற லிங்கம் அகத்தியலிங்கம் எனப்படும். தமிழ்நாட்டிற்கு காவிரி கிடைத்தது அகத்தியரால்தான்.இவற்றில் அகத்தியரின் அளவற்ற பெருமைகள் விளங்கும்.

காயத்ரி மந்திரம்

காயத்ரி மந்திரம்


காயத்ரி மந்திரம்:
                      "நம்முடைய தேசீய மந்திரமாக இருப்பது, தேசீய லட்சியமாக இருப்பது, மானிட வர்க்கத்திற்கே லட்சியமாக இருப்பது காயத்ரி மந்திரம்.  வேதத்தினுடைய சாரம் காயத்ரியில் அடங்கியிருக்கிறது. மானுட வாழ்க்கையின் இலட்சியத்தை அது விளக்குகிறது. "

                    " காயத்ரி மந்திரம் பிரார்த்தனையாகவும், தியான சுலோகமாகவும், அமைந்திருக்கிறது.  பரபிரம்மத்தின் அம்சங்களாகிய பல தெய்வங்களுக்கு பல காயத்ரி மந்திரங்கள் அமைந்திருக்கின்றன.  அவைகளை தேவி காயத்ரி, ருத்ர காயத்ரி, விஷ்ணு காயத்ரி, சுப்ரமணிய காயத்ரி, கணேச காயத்ரி என பாகுபடுத்தலாம்.  இத்தனை வித காயத்ரிகளுள் நாடு முழுவதும் பல்லாண்டுகளாகப் பொதுவாக இருந்து வருகிற காயத்ரி ஒன்றேயாம்.  இது பிரம்ம காயத்ரி அல்லது சூரிய காயத்ரி என்று அழைக்கப்படுகிறது.  இனி பரம ஹம்ச காயத்ரி என்பது ஒன்றுண்டு.  அது துறவியர்களுக்கு உரியதாகும்.  துறவியர்கள் உட்பட வழிபாடு செய்கின்ற மக்கள் எல்லோர்க்கும் பொதுவாக இருப்பது சூரிய காயத்ரி. "

ஓம் பூர்புவஸ்ஸுவ்:
ஓம் தத் ஸவிதுர்வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி!
தியோ யோ ந: ப்ரசோதயாத்!!

ய: யார்ந:நம்முடைய திய:
அறிவை ப்ரசோதயாத்:தூண்டுகிறாரோ
தத்:அந்த தேவஸ்ய:சுடருடைய
ஸவிது:கடவுளின் வரேண்யம்:
மேலான பர்க: ஒளியை
தீமஹி தியானிப் போமாக
" யார் நம் அறிவைத் தூண்டுகிறாரோ அந்த சுடர்க் கடவுளின் மேலான ஒளியைத் தியானிப்போமாக "

                    இது தான் காயத்ரி மந்திரத்தின் தமிழாக்கம், " காயத்ரி மந்திரத்தை மற்றவர்களோடு கூடியிருந்து உரக்க உச்சரிக்கலாம்.  இறைவனுடைய நாம பஜனத்தை எல்லோரும் ஒன்று கூடியிருந்து உரக்க உச்சரிப்பது போன்று, காயத்ரி மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.....  காலையிலும், மாலையிலும், நண்பகலிலும் ஆகிய மூன்று சந்தியா வேளைகளில் இந்த வழிபாட்டில் ஈடுபடுவது உசிதம்.  நண்பகலில் இதில் ஈடுபட இயலாவிடில், ஒரே ஒரு தடவை இந்த ஈடுபாட்டை ஞாபகத்திற்கு கொண்டு வந்தால் போதுமானது.  உடல்பயிற்சி உடலை உறுதிப்படுத்துவது போன்றும், கல்வி மனதைப்  பண்படுத்துவது போன்றும், காயத்ரி மந்திரம் மனிதனுடைய ஆத்ம சொரூபத்தை ஊக்குவிக்கிறது. காயத்ரி மந்திரத்தை உரு ஏற்றுபவர்களுக்கு நன்மை உண்டாகிறது.  ஆடவர், மகளிர் என்ற பாகுபாடின்றிப் பெரு வாழ்வை நாடும் பெரு மக்கள் எல்லோரும், இந்த சிறந்த வேத மந்திரத்தை  நன்கு பயன்படுத்துவது உசிதம்.

                       காயத்ரியை வழிபடுபவன், காயத்ரி மந்திரத்தைச் சரியாக அறிந்து உபயோகப்படுத்துகிறவர்கள் எல்லோரும் துவிஜர்கள் ஆகின்றனர்.  துவிஜன் என்றால் இரு பிறப்பாளன். 

                      தாயின் வயிற்றிலிருந்து பிறந்து வருவது ஒரு பிறவி.  தன்னுடைய வாழ்க்கையை மேலான வாழ்க்கையாகத்திருத்தி அமைக்க ஆரம்பிக்கும் பொழுது மனிதன் ஆன்மீகத்துறையில் இன்னொரு பிறப்பு எடுத்தவன் ஆகிறான்.  ஆகையினால், அவன் துவிஜன்- இரு பிறப்பாளன் என்று சொல்லப்படுகிறான்.  அதற்குத் தூண்டுதலாக வந்தமைந்ததிருப்பது காயத்ரி மந்திரம்.

கணபதி மந்திரங்கள் (செல்வம் வளர,கடன் தொல்லை நீங்க)

கணபதி மந்திரங்கள் (செல்வம் வளர,கடன் தொல்லை நீங்க)

1. ஏகாக்ஷர கணபதி: (கணபதி அருள் கிடைக்க)

மூலமந்திரம் : ஓம் கம் கணபதயே நம:

2. மகாகணபதி : (பரிபூரண சித்தி)

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம்
கணபதயே வரவரத ஸர்வ ஜனம் மே
வசமானய ஸ்வாஹா

3. மோகன கணபதி : (எப்போதும் பாதுகாப்பு)

ஓம் வக்ரதுண்ட ஏக தம்ஷ்ட்ராய
க்லீம் ஹ்ரீம் கம் கணபதயே
வரவரத ஸர்வஜன மே வசமானய ஸ்வாஹா

4. லக்ஷ்மி கணபதி : (செல்வம் வளர)

அ. ஓம் ஸ்ரீம் கம் ஸெளம்யாய கணபதயே
வரவரத ஸர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா !

ஆ. ஓம் கம் ஸ்ரீம் ஸெளம்யாய
லக்ஷ்மீ கணேச வரவரத
ஆம் ஹ்ரீம் க்ரோம்
ஸர்வஜனம் மே வஸமானய ஸ்வாஹா !

இ. வக்ர துண்ட ஏகதம்ஷ்ட்ராய க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம்
கம் கணபதயே வரவரத ஸர்வஜனம் மே
வஸமானய ஸ்வாஹா ஓம் க்லீம் ஸெள:

5. ருணஹர கணபதி : (கடன் தொல்லை நீங்க)

ஓம் கணேச ருணம் சிந்தி வரேண்யம் ஹும் நம: பட்

6. மகாவித்யா கணபதி : (தேவியின் அருள் கிட்ட)

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் கலௌம் கம் கஏஈல ஹ்ரீம்
கணபதயே ஹஸகஹல ஹ்ரீம் வரவரத
ஸகலஹ்ரீம் ஸர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா

7. ஹரித்ரா கணபதி : (உலகம் வயப்பட)

ஓம் ஹும்கும்க் லௌம் ஹரித்ரா கணபதயே
வர வரத ஸர்வஜன ஹ்ருதயம் ஸ்தம்பய ஸ்தம்பய ஸ்வாஹா

8. வக்ரதுண்ட கணபதி : (அதிர்ஷ்ட லாபம்)

வக்ர துண்டாய ஹும்

9. நிதி கணபதி : (செல்வம் கிட்ட)

ராயஸ்பேஷஸ்ய ததி தா நிதி தோ ரத்னதா துமான்:
ர÷க்ஷõஹணோ பலக ஹநோ வக்ரதுண்டாய ஹும் !!

10. புஷ்டி கணபதி :

ஓம் கம் கைம் கணபதயே விக்னவிநாசினே ஸ்வாஹா

11. பால கணபதி : (மகிழ்ச்சி)

ஓம் கம் கணபதயே நமஸ் ஸித் தி தாய ஸ்வாஹா

12. சக்தி கணபதி : (எல்லாக் காரியமும் நிறைவேற)

ஓம் ஹ்ரீம் க்ரீம் ஹ்ரீம்

13. ஸர்வ சக்தி கணபதி : (பாதுகாப்பு)

ஓம் ஹ்ரீம் கம் ஹ்ரீம் மஹாகணபதயே ஸ்வாஹா

14. க்ஷிப்ர பிரஸாத கணபதி : (சீக்கிரம் பயன்தர)

ஓம் கம் க்ஷிப்ர ப்ரஸாதனாய நம:

15. குக்ஷி கணபதி : (நோய் நீங்க)

ஓம் ஹும் க்லௌம் டட ராஜ
ஸர்வஜன கதிமதி க்ரோத ஜிஹ்வா
ஸ்தம்பய ஸ்தம்பய ஸ்வாஹா

16. சந்தான லக்ஷ்மி கணபதி : (பிள்ளைப் பேறு உண்டாக)

ஓம் நமோ லக்ஷ்மி கணேசாய
மஹ்யம் புத்ரம் ப்ரயச்ச ஸ்வாஹா

17. சுவர்ண கணபதி : (தங்கம் கிடைக்க)

ஓம் க்ஷ்ம்ரியூம் க்ஷிப்ர கணபதயே ஸுவர்ணகே ஹே
வ்யவஸ்திதாய ஸ்வர்ணப்ரதாய க்லீம் வஷட்ஸ்வாஹா

18. ஹேரம்ப கணபதி : (மனச்சாந்தி)

ஓம் கூம் நம:

19. விஜய கணபதி : (ஐயம் ஏற்பட)

ஓம் க்லௌம் ஸ்ரீம் ஸர்வவிக்ன ஹந்த்ரே
பக்தானுக்ரஹ கர்த்ரே விஜயகணபதயே ஸ்வாஹா

20. அர்க்க கணபதி : (நவக்கிரக சாந்தி)

ஓம் கம் கணபதி அர்க்க கணபதி வரவரத
ஸர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா

21. உச்சிஷ்ட கணபதி : (முக்காலமும் உணர)

ஓம் நமோ பகவதே ஏக தம்ஷ்ட்ராய ஹஸ்திமுகாய
லம்போதராய உச்சிஷ்ட மகாத்மனே
ஆம் க்ரோம் ஹ்ரீம் கம் கே கே ஸ்வாஹா

22. விரிவிரி கணபதி : (விசால புத்தி)

ஓம் ஹ்ரீம் விரிவிரி கணபதி ஸர்வம்மே
வசமானய ஸ்வாஹா

23. வீர கணபதி : (தைரியம் வர)

ஓம் ஹ்ரீம் க்லீம் வீரவர கணபதயே வ : வ :
இதம் விச்வம் மம வசமானய ஓம் ஹ்ரீம் பட்

24. ஸங்கடஹர கணபதி : (தொல்லை யாவும் நீங்க)

ஓம் நமோ ஹேரம்ப மத மோதி த மம ஸர்வஸங்கடம்
நிவாராய நிவாராய ஹும்பட் ஸ்வாஹா

25. விக்னராஜ கணபதி : (ராஜயோகம்)

ஓம் கீம் கூம் கணபதயே நம: ஸ்வாஹா

26. ராஜ கணபதி

ஓம் நமோ ராஜகணபதே மஹாவீர தசபுஜ மதன கால
விநாசன ம்ருத்யும் ஹந ஹந, யம யம, மத மத
காலம் ஸம்ஹர ஸம்ஹர த்ரை லோக்யம் மோஹய மோஹய
ப்ரும்ம விஷ்ணுருத்ரான் மோஹய மோஹய, அசிந்த்ய
பல பராக்ரம ஸர்வ வ்யாதீன் விநாசய, விநாசய
ஸர்வக்ரஹான் சூர்ணய சூர்ணய, நாகான் மூட ய
மூட ய, த்ரிபுவனேச்வர ஸர்வதோ முக ஹும்பட் ஸ்வாஹா

27. துர்க்கா கணபதி : (துக்க நிவாரணம்)

ஓம் ஹ்ரீம் கம் ஹ்ரீம் தும் துர்கா புத்ராய சக்தி ஹஸ்தாய
மாத்ரு வத்ஸலாய மஹா கணபதயே நம:

28. யோக கணபதி :

ஓம் ஹம் ஸம் கம் பகவதே நித்யயோக யுக்தாய
ஸச்சிதானந்த ரூபிணே விநாயகாய நம:

29. நிருத்த கணபதி : (கலை வளர)

ஓம் க்லௌம் ஜம் ஜம் ஜம் நம் நர்த்தனப்ரியாய
சிதம்பரானந்த தாண்டவாய கஜானனாய நம:

30. ஸித்தி கணபதி : (எல்லாக் காரியங்களும் வெற்றி)

ஓம் நம: ஸித்திவிநாயகாய ஸர்வகார்ய கர்த்ரே
ஸர்வ விக்ன ப்ரசமனாய ஸர்வராஜ்ய
வச்யகரணாய, ஸர்வஜன ஸர்வ ஸ்த்ரீ புருஷ
ஆகர்ஷணாய ஸ்ரீம் ஓம் ஸ்வாஹா

31. புத்தி கணபதி : (கல்விப் பேறு)

ஓம் ஐம் வாக் கணபதயே ஸ்வாஹா

32. மோதக கணபதி : (முழுப்பலனும் கிட்ட)

ஓம் மம் மஹாகணபதயே ஏகதந்தாய ஹேரம்பாய
மோதக ஹஸ்தாய நாளிகேர ப்ரியாய ஸர்வாபீஷ்ட
ப்ரதாயினே ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸர்வ ஜனம் மே
வசமானய ஸ்வாஹா

33. மோஹன கணபதி : (முழுப் பாதுகாப்பு)

ஓம் ஆம் க்லீம் ஸர்வசக்தி கணாதீச மாம் ரக்ஷரக்ஷ
மம சான்னித்யம் குருகுரு, அஷ்டைச் வர்யாதி பூதி
ஸம்ருத்திம் குருகுரு, ஸர்வதுக்கம் நாசய நாசய
ஸர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா ஆனய
மோஹனோத்தம விநாயகாய ஹும்பட் ஸ்வாஹா

34. குரு கணபதி : (குருவருள் உண்டாக)

ஓம் கம் கணபதயே ஸர்வ விக்ன ஹராய ஸர்வாய
ஸர்வ குரவே லம்போதராய ஹ்ரீம் கம் நம:

35. தூர்வா கணபதி : (தாப நீக்கம்)

ஓம் ஹ்ரீம் கலாம் ஸ்ரீம் தும் துரித ஹராய
தூர்வா கணேசாய ஹும்பட்

36. அபீஷ்ட வரத கணபதி : (நினைத்ததை அடைய)

ஓம் ஸ்ரீம்ஸ்ரீம் கணாதி பதயே ஏகதந்தாய லம்போதராய
ஹேரம்பாய நாளிகேரப்ரியாய மோதக பக்ஷணாய மம
அபீஷ்ட பலம் தேஹி ப்ரதிகூலம் மே நச்யது அனுகூலம் மே
வசமானய ஸ்வாஹா

37. ரத்ன கர்ப்ப கணபதி மந்திரம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்
ஓம் நமோ பகவதே ரத்னகர்ப கணபதயே
கஏ ஈலஹ்ரீம் ஸ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்லூம்
ப்லூம் ப்லூம் ப்லூம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஹஸகஹலஹ்ரீம் வரவரத ஸர்வஸித்திப்ரதாய
ஸகல ஹ்ரீம் ஸர்வைச் வர்யப்ரதாய
ஹஸகல ஹஸகஹல ஸர்வாபீஷ்ட ஸித்திம்
குருகுரு ரத்னம் தேஹிம் ரத்னம் தேஹிம்
தா பய தா பய தா பய ஸ்வாஹா ஸகல ஹ்ரீம்

38. வாஞ்சா கல்பலதா கணபதி மந்திரம்
(குமார சம்ஹிதையில் காண்பது)

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் ஐம்
க ஏ ஈல ஹ்ரீம் தத்ஸவிதுர் வரேண்யம் கணபதயே
க்லீம் ஹஸகஹல ஹரீம் பர்கோ தேவஸ்ய தீமஹி
வர வரத ஸெள: ஸகல ஹ்ரீம் தீயோ யோ ந:
ப்ரசோதயாத் ஸர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா

39. கணபதியைக் குறித்து வரும் ரிக்வேத மந்திரம்

கணனாம் த்வா கணபதிம் ஹவாமஹே
கவிம் கவீனாம் உபமஸ்ர வஸ்தமம்
ஜ்யேஷ்டராஜம் பிரம்மணாம் ப்ரம்மணஸ்பத
ஆன ச்ருண்வந் ஊதிபி: ஸீத ஸாதனம்

40. கணபதி உபநிஷத் தரும் மந்திரம்

நமோ வ்ராதாபதயே நமோ கணபதயே நம: ப்ரமதபதயே
நமஸ்தே அஸ்து, லம்போதராய ஏகதந்தாய
விக்னவிநாசினே சிவஸுதாய ஸ்ரீவரத மூர்த்தயே நம:

41. கணேசர் மாலா மந்திரம்

ஓம் நமோ மஹாகணபதயே, மஹாவீராய, தசபுஜாய, மதனகால விநாசன, ம்ருத்யும் ஹநஹந, யமயம, மத மத, காலம் ஸம்ஹர ஸம்ஹர, ஸர்வக் ரஹான், சூர்ணய, சூர்ணய, நாகான் மூடய மூடய, ருத்ரரூப, த்ரிபுவனேச்வர ஸர்வதோமுக ஹும்பட் ஸ்வாஹா

ஓம் நமோ கணபதயே, ச்வேதார்க்க கணபதயே ச்வேதார்க்கமூல நிவாஸாய, வாஸுதேவப்ரியாய, தக்ஷப்ரஜாபதி ரக்ஷகாய, ஸுர்ய வரதாய, குமாரகுரவே, ப்ரஹ்மாதி ஸுராஸுர வந்திதாய ஸர்வபூஷணாய, சசாங்க சேகராய, ஸர்வ மால அலங்க்ருதாய, தர்மத்வஜாய, தர்ம வாஹனாய, த்ராஹி, த்ராஹி, தேஹிதேஹி, அவதர அவதர, கம்கணபதயே, வக்ரதுண்டகணபதயே, வரவரத ஸர்வபுருஷ வசங்கர, ஸர்வதுஷ்டம்ருக வசங்கர, ஸர்வஸ்வ வசங்கர,  வசீகுரு, வசீகுரு, ஸர்வதோஷான் பந்தய பந்தய ஸர்வ வ்யாதீன் நிக்ருந்தய நிக்ருந்தய ஸர்வ விஷானி ஸம்ஹர ஸம்ஹர, ஸர்வதாரித்ரியம், மோசய மோசய, ஸர்வ விக்னான் சிந்தி சிந்தி, ஸர்வவஜ்ராணி ஸ்போடய ஸ்போடய ஸர்வ சத்ரூன் உச்சாடய உச்சாடய, ஸர்வஸித்திம் குரு குரு, ஸர்வ கார்யாணி ஸாதய ஸாதய, காம் கீம் கூம் கைம் கௌம் கம் கணபதயே ஹும்பட் ஸ்வாஹா

ஓம் நமோ பகவதே ஸ்ரீரீம் ஹ்ரீம் மஹா கணபதயே ஸ்ரீரீம் ஹ்ரீம் கம் கணபதயே கஜானனாய மஹாபுஜாய மஹா மஹேச்வர ஸுதாய மஹாபாசாங்குச தராய யக்ஷக்ரஹாந் ராக்ஷஸ க்ரஹாந் பூதக்ரஹாந் ப்ரேத க்ரஹாந் பிஸாச க்ரஹாந் அந்யாஸ்ச க்ரஹாந் தஹதஹ சேதய சேதய சிரஸ்ஸுல கடிஸ்ஸுல லிங்கசூல பக்ஷசூல ஸர்வசூலான் த்ராசய த்ராஸய ஸர்வோப தர வாந் நாசய நாசய ஸர்வ ஜ்வராந் நாசயநாசய ஹ்ராம்ஹ்ரீம் ஹ்ரூம் ஹும்பட் ஸ்வாஹா

ஓம் நமோ பகவதே ஸ்ரீ மஹா கணபதயே கஜானனாய மஹாரூபாய மஹா மூஷிக வாஹநாய மகாவிக்நராஜாய மகாலம்போதராய மகாபூதவசங் கராய மகாசர்வக்ரஹ நிவாரணாய ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் சர்வஜ்வரான் சோதய ஸர்வாரிஷ்டப்ரமசன கஜானந நமோஸ்துதே

ஓம் ஜயஜய விஜயவிஜய அநந்தோபராஜித மகா பராக்ம ப்ரதிஹத விச்வரூப விரூபாக்ஷ விக்நேச்வர அஷ்டகுல நாகானாம் விஷம் சிந்தி சிந்தி பிந்தி பிந்தி சேதய சேதய ஆக்ஞாபய ஆக்ஞாபய ஆகர்ஷய ஆகர்ஷய ஸ்தம்பய ஸ்தம்பய மோஹய மோஹய பீஷய பீஷய நமோஸ்துதே

ஓம் ஜயஜய மஹாரூபாய மஹா பாசாங்குச தராய மஹாசக்திரூபாய மஹா மஹேச்வரசுதாய யக்ஷக்ரஹான் ராக்ஷஸக்ரஹான் பூதக்ரஹான் ப்ரேதக்ரஹான் கூஷ்மாண்டக்ரஹான் ஏதான் அந்யாஸ்சக்ரஹான் ஹநஹந தஹதஹ சேதய சேதய சிரஸ்ஸுல ஸர்வசூலான் த்ராஸய த்ராஸய மஹாஜ்வரான் கேதய கேதய பரந்த்ரான த்ராஸய த்ராஸய ஆத்மமந்த்ரான் ப்ரபோதய ப்ரபோதய மம ஸர்வ கார்யாணி ஸாதய ஸாதய ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் ஹும்பட் ஸ்வாஹா

ஓம் நமோ பகவதே ஸ்ரீமஹா கணாதி பதயே ஸ்மரணமாத்ர ஸந்துஷ்டாய ஸர்வ வித்யாப்ரதா ய மஹாக்ஞானப்ரதாய சிதானந்தாத்மனே கௌரீ நந்தனாய மஹாயோகினே சிவப்ரியாய ஸர்வானந்த வர்தனாய ஸர்வ வித்யா ப்ரகாசாய ஸர்வகாமப்ரதாய ஓம் மோக்ஷப்ரதாய ஐம் வாக்ப் ரதாய ஸ்ரீம் மஹாஸம்பத்ப்ரதாய க்லீம் ஜகத்ரய வசீகரணாய ஹ்ரீம் ஸர்வ பூதிப்பரதாயே க்லௌம் பூமண்டலாதிபத்ய வ்ரதாய ஆம் ஸாத்ய பந்தனாய க்ரோம் ஸாத்யாகர்ஷணாய ஸெளம் ஸர்வ மன : ÷க்ஷõபனாய த்ராம் சிரஞ்ஜீவினே ப்லூம் ஸம் மோஹநாய வெளஷட் மம வசீகரணம் குரு ருரு மம வசீகுரு வசீகுருவெளஷட் ஆகர்ஷய ஆகர்ஷய ஹும் வித்வேஷய வித்வேஷய ப்ரோம் உச்சாடய உச்சாடய மம ஸ்தம்பய ஸ்தம்பய ஸ்வாஹா போஷய போஷய நம : ஸம்பன்னய ஸம்பன்னய கேம் கேம் மாரய மாரய பரமந்த்ர பரதந்த்ர பரயந்த்ரான் சிந்தி சிந்தி கம் க்ரஹான் நிவாரய நிவாரய ஹம் வ்யாதீன் நாசய நாசய தஹத ஹ து:கம் ஹநஹந ஸ்வர்க பல மோக்ஷபல ஸ்வரூபாய ஸ்ரீ மஹாகணபத யே ஸ்வாஹா.

42. ச்வேதார்க் கணபதி மாலாமந்த்ர :

ஓம் நமோ பகவதே ச்வேதார்க் கணபதயே
ச்வேதார்க மூலநிவாஸாய வாஸுதேவ ப்ரியாய
தக்ஷப்ரஜாபதி ரக்ஷகாய ஸூர்யவரதாய குமார
குரவே ப்ருமமாதி ஸுராஸுவந்திதாய ஸர்வ பூஷணாய
சசாங்கசேகராய ஸர்ப மாலாங்கிருததேஹாய
தர்மத்வஜாய தர்மவாஹானய த்ராஹி த்ராஹி
தேஹி தேஹி அவதர அவதர கம் கணபதயே
வக்ரதுண்ட கணபதயே வர வரத ஸர்வ புருஷ
வசங்கர ஸர்வதுஷ்ட க்ரஹ வசங்கர ஸர்வ
துஷ்ட ம்ருகவசங்கர ஸர்வஸ்வ வசங்கர வசீகுரு
வசீகுரு ஸர்வதோஷான் பந்தய பந்தய ஸர்வ
வ்யாதீன் நிக்ருந்தய நிக்ருந்தாய ஸர்வ விஷாணி
ஸம்ஹர ஸம்ஹர ஸர்வதாரித்ர்யம் மோசய மோசய
ஸர்வவிக்னான் சிந்தி சிந்தி ஸர்வ வஜ்ரான் ஸ்போடய
ஸ்போடய ஸர்வ சத்ருன் உச்சாடய உச்சாடய
ஸர்வ ஸம்ருத்திம் குரு குரு ஸர்வகார்யாணி ஸாதய
ஸாதய ஓம் காம் கீம் கூம் கைம் கௌம் கம்
கணபதயே ஹும் பட் ஸ்வாஹா

43. போக கணபதி (ஸகலபோகப்ரதம்)

அஸ்யஸ்ரீ போக கணபதிமஹா மந்த்ரஸ்ய கணக ரிஷ: காயத்ரீ சந்த: போக கணேசோ தேவதோ

கராங்கந்யாஸ:

ஓம்
ஹ்ரீம்
கம்
வசமானாய
ஸ்வாஹா   இதி கராங்கந்யாஸ :
ஸ்வாஹா
ஓம் ஹ்ரீம் கம்  வசமானய ஸ்வாஹா

தியானம்

பந்தூகாபம் த்ரிணேத்ரம் சசிதர மகுடம் போகலோலம் கணேசம் நாகாஸ்யம் தாரயந்தம் குணஸ்ருணி வரதாநிக்ஷúதண்டம் கராக்ரை: கண்டாஸம் ஸ்ப்ருஷ்ட யோஷா மதன க்ரஹ்மமும் ச்யாமலாங்க்யாதயாபி

ச்லிஷ்டம் லிங்க ஸ்ப்ருசாதம் வித்ருத கமலயா பாவயேத் தேவ வந்த்யம்:

லமித்யாதி பூஜா
மந்த்ரா :

ஓம் ஹ்ரீம் கம் ஹ்ரீம் வசமானயஸ்வாஹா
ஹ்ருதயாதி ந்யாஸ : திக்விமோக :
தியானம் லமித்யாதி பூஜா
ஸமர்பணம்

44. கணேசாங்க நிவாஸிநீ ஸித்த லக்ஷ்மீ மந்த்ர :

அஸ்யஸ்ரீ ஸித்த லக்ஷ்மீ மஹாமந்த்ரஸ்ய கணகரிஷி : நிச்ருத் காயத்ரீ சந்: ஸ்ரீ கணேசாங்க நிவாஸிநீ மஹா லக்ஷ்மீர்தேவதா ஸ்ரீம் பீஜம் ஹ்ரீம் சக்தி: ஸ்வாஹா கீலகம் ஸ்ரீ ஸித்த லக்ஷ்மீ ப்ரஸாத ஸித்யர்த்தே ஜபே விநியோக:

கராங்கந்யாஸ:

ஓம் ச்ராம்
ச்ரீம் ச்ரீம்
ஹ்ரீம் ச்ரூம்  இதி கராங்கந்யாஸ :
க்லீம் ச்ரைம்
க்லௌம் ச்ரௌம்
கம் ச்ர:

தியானம்

முக்நாபாம்திவ்ய வஸ்த்ராம் ம்ருகமத திலகாம் புல்ல கல்ஹார மாலாம் கேயூரைர்மேகலாத்யை: நவமணி கசிதை : பூசணைர் பாஸமானாம் கர்பூராமோத வக்த்ராம் அபரிமித க்ருபா பூர்ண நேத்ரார விந்தாம் ஸ்ரீ லக்ஷ்மீம் பத்மஹஸ்தாம் ஜிதபதி ஹ்ருதயாம் விச்வ பூத்யை நமாமி

லமித்யாதி பூஜா
மந்த்ர:

ஓம் ச்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் ஓம் நமோ பகவதி மஹாலக்ஷ்மி வர வரதே ஸ்ரீம் விபூதயே ஸ்வாஹா ஹருதயாதிந்யாஸ: திக்யிமோக: தியானம் லமித்யாதி பூஜா

ஸமர்ப்பணம்.

45. குமார கணபதி (மாலா மந்த்ர:)

ஓம் நமோ பகவதே சூரமத்மாநாச காரணாய ஸர்வசக்தி தராய ஸர்ய யக்ஞோபதவீதனாய மஹா ப்ரசண்ட க்ரோதாய ப்ருஹத் குக்ஷிதராய அஸுர கோடி ஸம்ஹார காரணாய அகண்ட மண்டல தேவாத்யர்ச்சித பாத பத்மாய சாகினீ ராகினீ லாகினீ ஹுகினீ டாகினீ ஸாகினீ கூச்மாண்ட பூத வேதாள பைசாச ப்ரும்மராக்ஷஸ துஷ்டக்ரஹான் நாசய நாசய பாரத லிகித லேகினீகராய அபஸ்மார க்ரஹம் நிவாரய நிவாரய மர்தய மர்தய குஹாக்ரஜாய கஜவதனாய கஜாஸுரஸம்ஹரணாய கர்ஜித பூத்காராய ஸகல பூதப்ரேத பிசாச பிரும்ராக்ஷஸான் சூலேன ஆக்ருந்தய ஆக்ருந்தய சேதய சேதய மாரய மாரய மஹா கணபதயே உமா குமாராய ஹும் பட் பந்த பந்த டம் க்லாம் க்லௌம் கம் கணபதயே நம:

46. ப்ரயோக கணபதி (மாலா மந்த்ர)

ஆம் த்ரீம் க்ரௌம் கம் ஓம் நமோ பகவதே மஹா கணபதயே ஸ்மணரமாத்ர ஸந்துஷ்டாய ஸர்வ வித்யா ப்ரகாசகாய ஸர்வ காம ப்ரதாய பவ பந்த விமோசனாய ஹ்ரீம் ஸர்வபூதபந்தனாய க்ரோம் ஸாத்யாகர்ஷணாய க்லீம் ஜகத்ராய வசீகரணாய ஸெள: ஸர்வமன÷க்ஷõலபணாய ஸ்ரீம் மஹாஸம்பத் ப்ரதாய க்லௌம் பூமண்டலாதிபத்ய ப்ரதாய மஹாயக்ஞாத்மனே கௌரீந்தனாய மஷா யோகினே சிவப்ரியாய ஸர்வாநந்த வர்த்தனாய ஸர்வவித்யா ப்ரகாசனப்ரதாய த்ராம் சிரஞ்ஜீவினே ப்லூம் ஸம் மோஹனாய ஓம் மோக்ஷ ப்ரதாய பட் வசீகுரு வசீகுரு வெளஷட் ஆகர்ஷணாய ஹும் வித்வேஷணாய வித்வேஷய பட் உச்சாடய உச்சாடய ட: ட: ஸ்தம்பய ஸ்தம்பய  கேம் கேம் மாரய மாரய சோஷய சோஷய பர மந்த்ர யந்த்ர தந்த்ராணிசேதய சேதய துஷ்டக்ரஹான் நிவாரய நிவாரய துக்கம்ஹர ஹர வ்யாதிம் நாசய நாசய நம: ஸம்பன்னாய ஸம்பன்னாய ஸ்வாஹா ஸர்வபல்லவஸ்ரூபாய மஹாவித்யாய கம் கணபதயே ஸ்வாஹா :

47. தருண கணபதி (தியானம்)

பாசாங்குசாபூப கபித்த ஜம்பூ
ஸ்வதந்தசாலீ க்ஷúமபி ஸ்வஹஸ்தை:
தத்தே ஸதா யஸ்தருணாருணாப:
பாயாத் ஸ யுஷ்மான் தருணோ கணேச:

மந்த்ர :

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் கம் நமோ பகவதே நித்ய
யௌவனாய புவதிஜன ஸமாச்லிஷ்டாய கணபதயே நம:

48. ஆபத்ஸஹாய கணபதி (ஆபத் நிவர்த்தி)

ஆபதாமபஹர்த்தாரம் தாதாரம் ஸுக ஸம்பதாம்
க்ஷிப்ர ப்ரஸாதனம் தேவம் பூயோ பூயோ நமாம்யஹம்:

49. நவநீத கணபதி (மனோவச்யம்)

ஐம் ஹ்ரீம் ச்ரீம் ஓம் க்லௌம் நவநீத கணபதயே நம:

50. மேதா கணபதி (மேதாபிவ்ருத்தி)

மேதோல்காய ஸ்வாஹா:

51. வாமன கணபதி (விஷ்ணு பக்தி)

ஓம் வம் யம் ஸெளபாக்யம் குரு குரு ஸ்வாஹா:

52. சிவாவதார கணபதி

ஓம் ஸ்ரீம் த்ரீம் க்லீம் க்லௌம் கம் ஓம் நமோ கணபதயே ஓம் சிம் வர வரத ஓம் வாம் ஸர்வ ஜனம் மே ஓம் யம் வசமானய ஸ்வாஹா:

53. ரக்த கணபதி (வச்யஸித்தி)

ஓம் ஹஸ்தி முகாய லம்போதராய ரக்த மஹாத்மனே ஆம் க்ரோம் ஹ்ரீம் ஹும் ஹும் ஹும் கே கே ரக்த களேபராய தயாபராய ஸ்வாஹா :

54. ப்ரம்மணஸ்பதி

1. ஹ்ரீம் ச்ரீம் க்லீம் நமோ கணேச்வராய ப்ரும்ம ரூபாய சாரவே
ஸர்வஸித்தி ப்ரதேயாய ப்ரம்மணஸ்பதயே நம:

2. நமோ கணபதயே துப்யம் ஹேரம்பாயைக தந்தினே ஸ்வானந்த
வாஸினே துப்யம் ப்ரம்மணஸ்பதயே நம:

55. மஹா கணபதி ப்ரணவமூலம்
ஓம்

த்வநி மந்திரம்

ஓம் ஸ்ரீம் விக்நேச்வர ஆஹுவாஹனாய சிவசிவ லம்போதராய வக்ரதுண்டாய ஸுர்ப்ப கர்ணாய ஸித்தி விநாயகாய ஸ்ரீம் மஹா கணபதயே க்லீம் ஸ்ரீம் ஸெளம் ஐம் ஹ்ராம் ஹ்ரீம்

சதாசிவ கணபதி

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் கலௌம் ஈம் நம் ஆம் ஹம் ஸம்பன்னுவஸ்ச ஸதாசிவ கணபதயே வரவரத ஸர்வ ஜகம் மே வசமானய ஸகலைச் வர்யம் ப்ரயச்ச ஸ்வாஹா

தெய்வத்திற்கும் தண்ணீருக்கும் உள்ள ஒற்றுமை தெரியுமா?

தெய்வத்திற்கும் தண்ணீருக்கும் உள்ள ஒற்றுமை தெரியுமா?


தாயைக் கழித்தாலும் தண்ணீரைக் கழிக்காதே என்று கூறுவார்கள். தண்ணீரை வீணாக்குபவர்கள் பெரிய சிரமத்திற்கு ஆளாவார்கள் என்பது பெரியோர்கள் கண்ட உண்மை. தண்ணீர் தெய்வத்திற்கு சமமானது என்பததை இப்படி விளக்குகிறார்கள். தண்ணீர் உயரமான இடத்திலிருந்து தாழ்வான இடத்தை நோக்கியே வரும். அதே போல் கடவுளும் உயரமான இடத்திலிருந்து அவதாரம் என்று சொல்லி கீழ் நோக்கி வருகிறார். தண்ணீர் எந்த நிறத்தில்கலக்கிறதோ அதே நிறத்தைப் பெறுகிறது. அதே போல் கடவுளும் எந்த அவதாரத்தை எடுக்கிறாரோ அந்த நிறத்தைக் காட்டுவார்.

தண்ணீருக்கு நிறம், மணம், குணம் கிடையாது. அதேபோல அருவமான கடவுளுக்கும் நிறம்,மணம், குணம் கிடையாது. உணவுப் பொருளை உற்பத்தி செய்ய உதவுவது தண்ணீர்தான். அது தானும் உணவாவது போல இறைவன் பக்தியின் விளை நிலமாகவும், பக்திப் பொருளாகவும் ஆகிறான். தண்ணீர் நாம் எடுக்கும் பாத்திரத்தின் அளவுக்கே நிறைவது போல இறைவனும் பக்தியின் அளவுக்கே பலன் தருகிறான். தண்ணீருக்கு ஏழை,பணக்காரன், ஆண், பெண், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்றபேதம் கிடையாது. கடவுளுக்கும் இந்தவிதமான பேதங்கள் கிடையாது என்பதை நாம் அறிவோம். தண்ணீரை சர்வதேவதா ஸ்வரூபம் என்கிறது வேதம்.
 
 

நவக்ரஹ சாந்திமாலா மந்த்ரங்கள்!

நவக்ரஹ சாந்திமாலா மந்த்ரங்கள்!

சூரியன்

1. ஸ்ரீம் ஓம் நமோபகவதி ஸ்ரீஸூலிநி
ஸர்வபூதேஸ்வரி ஜ்வல ஜ்வல, மயி ஸூப்ரீதா
ஸர்வபூதாநி தோஷய தோஷய, ஸூர்யக்ரஹ
நிபீடநாத் .. .. .. நக்ஷத்ரே .. .. ராஸெளஜாதம்.....
ஸர்மாணம் மாம் (அமும் யஜமாநம்) மோஷய
மோஷய ஸ்வாஹா.

சந்திரன்

2. ஸ்ரீம் ஓம் நமோபகவதி ஸ்ரீஸூலிநி
ஸர்வபூதேஸ்வரி ஜ்வல ஜ்வல, மயி ஸூப்ரீதா
ஸர்வபூதாநி தோஷய தோஷய, சந்த்ரக்ரஹ பீடநாத்
.. .. நக்ஷத்ரே .. .. ராஸெளஜாதம் ஸர்மாணம் மாம்
(அமும் யஜமாநம்) மோஷய மோஷய ஸ்வாஹா.

செவ்வாய்

3. ஸ்ரீம் ஓம் நமோபகவதி ஸ்ரீஸூலிநி
ஸர்வபூதேஸ்வரி ஜ்வல, ஜ்வல, மயி ஸூப்ரீதா
ஸர்வபூதாநி தோஷய தோஷய, அங்காரகக்ரஹ
நிபீடநாத்.. .. .. நக்ஷத்ரே.. .. ராஸெளஜாதம்
ஸர்மாணம் மாம் (அமும் யஜமாநம்) மோஷய
மோஷய ஸ்வாஹா.

புதன்

4. ஸ்ரீம் ஓம் நமோபகவதி ஸ்ரீஸூலிநி
ஸர்வபூதேஸ்வரி ஜ்வல ஜ்வல, மயி ஸூப்ரீதா
ஸர்வபூதாநி தோஷய தோஷய,ஸெளம்யக்ரஹ
நிபீடநாத்.. .. .. நக்ஷத்ரே.. .. ராஸெளஜாதம்
ஸர்மாணம் மாம் (அமும் யஜமாநம்) மோஷய
மோஷய ஸ்வாஹா.

வியாழன்

5. ஸ்ரீம் ஓம் நமோபகவதி ஸ்ரீஸூலிநி
ஸர்வபூதேஸ்வரி ஜ்வல ஜ்வல, மயி ஸூப்ரீதா
ஸர்வபூதாநி தோஷய தோஷய, ப்ருஹஸ்பதிக்ரஹ
நிபீடநாத்.. .. .. நக்ஷத்ரே.. .. ராஸெளஜாதம்.....
ஸர்மாணம் மாம் (அமும் யஜமமாநம்) மோஷய
மோஷய ஸ்வாஹா.

சுக்கிரன்

6. ஸ்ரீம் ஓம் நமோபகவதி ஸ்ரீஸூலிநி
ஸர்வபூதேஸ்வரி ஜ்வல ஜ்வல, மயி ஸூப்ரீதா
ஸர்வபூதாநி தோஷய தோஷய, ஸூக்ரக்ரஹ
பீடநாத்.. .. .. நக்ஷத்ரே.. .. ராஸெளஜாதம்
ஸர்மாணம் மாம் (அமும் யஜமாநம்) மோஷய
மோஷய ஸ்வாஹா.

சனி

7.  ஸ்ரீம் ஓம் நமோபகவதி ஸ்ரீஸூலிநி
ஸர்வபூதேஸ்வரி ஜ்வல ஜ்வல, மயி ஸூப்ரீதா
ஸர்வபூதாநி தோஷய தோஷய, ஸநைஸ்சரக்ரஹ
நிபீடநாத்.. .. .. நக்ஷத்ரே.. .. ராஸெளஜாதம்
ஸர்மாணம் மாம் (அமும் யஜமாநம்) மோஷய
மோஷய ஸ்வாஹா.

ராகு

8. ஸ்ரீம் ஓம் நமோபகவதி ஸ்ரீஸூலிநி
ஸர்வபூதேஸ்வரி ஜ்வல ஜ்வல, மயி ஸூப்ரீதா
ஸர்வபூதாநி தோஷய தோஷய, ராஹூக்ரஹ
நிபீடநாத்.. .. .. நக்ஷத்ரே.. .. ராஸெளஜாதம்
ஸர்மாணம் மாம் (அமும் யஜமாநம்) மோஷய
மோஷய ஸ்வாஹா.

கேது

9. ஸ்ரீம் ஓம் நமோபகவதி ஸ்ரீஸூலிநி
ஸர்வபூதேஸ்வரி ஜ்வல ஜ்வல, மயி ஸூப்ரீதா
ஸர்வபூதாநி தோஷய தோஷய, கேதுக்ரஹ
நிபீடநாத்.. .. .. நக்ஷத்ரே.. .. ராஸெளஜாதம்
ஸர்மாணம் மாம் (அமும் யஜமாநம்) மோஷய
மோஷய ஸ்வாஹா.

12 ராசிக்கு உரிய பரிகாரம் மற்றும் மந்திரங்கள்!

12 ராசிக்கு உரிய பரிகாரம் மற்றும் மந்திரங்கள்!

மேஷ ராசி: 

 மேஷ ராசியில் பிறந்தவர்கள் கீழ்க்கண்ட சுலோகத்தை 27 முறை கூறி முருகனுக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் துன்பங்கள் நீங்கும் !
ஷண்முகம் பார்வதீ புத்ரம்

க்ரௌஞ்ச ஸைவ விமர்த்தனம்
தேவஸேனாபதிம் தேவம் ஸ்கந்தம்
வந்தே ஸிவாத் மஜம்

ரிஷப ராசி:

ரிஷப ராசியில் பிறந்தவர்கள் மகாலட்சுமி பூஜை செய்தும், வெள்ளிக்கிழமை விரதம் இருந்து கீழ்க் கண்ட சுலோகத்தைத் தினசரி 11முறை

கூறி வந்தால் சகல செல்வங்களும் கிடைக்கும்.
ஸ்ரீ லக்ஷிமீம் கமல தாரிண்யை
ஸிம்ஹ வாஹின்யை ஸ்வாஹ


மிதுன ராசி:

மிதுன ராசியில் பிறந்தவர்கள் விஷ்ணுவுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை 54முறை தினசரி கூறி வந்தால் நல்ல பலன்
கிடைக்கும்.

ஓம் க்லீம் ஸ்ரீ கிருஷ்ணாய நம:

கடக ராசி:

கடக ராசியில் பிறந்தவர்கள் பவுர்ணமி தோறும் அம்பாளுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து விரதம் இருந்து, கீழ்க்கண்ட மந்திரத்தை 21முறை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.

ஓம் ஐம் க்லீம் ஸோமாய நம:

சிம்ம ராசி:

சிம்ம ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.

ஓம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-சூர்யாய நம:

கன்னி ராசி:

கன்னி ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு புதன்கிழமை விஷ்ணுவுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்தால் நல்ல பலன் ஏற்படும்.

ஓம்-ஐம்-ஸ்ரீம்-ஸ்ரீம்-புதாய நம:

துலா ராசி:
துலா ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு முறை பவுர்ணமி நாள் அன்று விரதம் இருந்து சத்யநாராயண பூஜை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்

ஓம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-சுக்ராய நம:

விருச்சிக ராசி:

விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து துர்க்கையை பூஜித்து வணங்கி கீழ்க்கண்ட சுலோகத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.

தரணி கர்ப்ப ஸம்பூதம்
வித்யுத் காந்தி ஸமப்ரதம்
குமாரம் சக்தி ஹஸ்தம்ச
மங்களம் ப்ரணமாம்யஹம்.

தனுசு ராசி:
தனுசு ராசியில் பிறந்தவர்கள் வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி கடவுளுக்கு அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் சகல நன்மைகள் உண்டாகும்.

ஓம் ஐம் க்லீம் பிரஹஸ்பதயே நம:

மகர ராசி
: மகர ராசியில் பிறந்தவர்கள் சனிக்கிழமை விரதம் இருந்து சனீஸ்வர பகவானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் சகல காரியங்களும் சித்தி அடையும்.

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் சனீஸ்வராய நம:

கும்ப ராசி:

கும்ப ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன்கள் உண்டாகும்.

ஓம் ஸ்ரீம் ஸ்ரீ உபேந்திராய அச்சுதாய நமோநம:

மீன ராசி: மீன ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமை சிவபெருமானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் துன்பங்கள் நீங்கும்.
ஓம் க்லீம் ஸ்ரீ உத்ராய உத்தாரணே நம: